தமிழகத்துக்கு ரூ.1,089.72 கோடி விடுவிப்பு: 2019 - ஆம் ஆண்டு மூன்றாம் கட்ட திட்டத்தில்தான் தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்களில் 75 புதிய மருத்துவக கல்லூரிகள் தொடங்க மொத்தம் ரூ. 24,375 கோடி திட்டச் செலவாக அனுமதிக்கப்பட்டது. இதில் 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் தொடங்கவும் குறிப்பாக தமிழகத்தில் மருத்துவ கல்லூரி இல்லாத அனைத்து மாவட்டங்களுக்கும் அனுமதிக்கப்பட்டது. இந்த 75 கல்லூரிகளுக்கு மத்திய அரசின் பங்கான ரூ. 15,499.74 கோடியில் ரூ.6,719.11 கோடி ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுவிட்டது. தலா ஒரு மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 375 கோடி என திட்டமிட்டு, மத்திய அரசு தன் பங்காக ரூ.195 கோடி வழங்குகிறது. இதில் தமிழகத்திற்கு ரூ. 2,145 கோடியில் ஆகஸ்ட் வரை ரூ.1,089.72 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இவை தவிர 8,000-க்கும் மேற்பட்ட புதிய முதுகலை மருத்துவ இடங்களை உருவாக்குவதற்கும் மத்திய - மாநில மருத்துவக் கல்லூரிகளை வலுப்படுத்தி மேம்படுத்தும் நோக்கத்துடனும் மத்திய அரசு நிதியை ஒதுக்கி திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.