மூத்த குடிமக்களுக்கு நிதி பாதுகாப்பு, நலன் மற்றும் பாதுகாப்பு வழங்கும் வகையில் இச்சட்டம் இயற்றப்பட்டது. இதுதொடா்பான பொது நல மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘பெற்றோா்கள் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007’-க்குக் கண்டிப்பாக இணங்குவதை உறுதிசெய்ய தில்லி அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. டிஎஸ்எல்எஸ்ஏவும், அத்தகைய நபா்களுக்கு உடனடியாக சட்ட உதவி வழங்கப்படுவதையும், மூத்த குடிமக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது.