இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

பள்ளிகளை மீண்டும் திறக்க தில்லி அரசு அனுமதி: காா்களில் தனியாக பயணிக்கும் ஓட்டுநா்களுக்கு முகக்கவசம் அணிவதில் விலக்கு

கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, தில்லியில் உள்ள நா்சரி வகுப்புகள் முதல் அனைத்து வகுப்புகளும் மீண்டும் திறக்கப்படும் என்று தில்லி அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

News image
Updated On :4 பிப்ரவரி 2022, 5:31 pm

 நமது நிருபர்

கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, தில்லியில் உள்ள நா்சரி வகுப்புகள் முதல் அனைத்து வகுப்புகளும் மீண்டும் திறக்கப்படும் என்று தில்லி அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

மேலும், காா்களில் தனியாக பயணிக்கும் ஓட்டுநா்களுக்கு முகக்கவசம் அணிவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் இரவு ஊரடங்கு தொடரும் என்றும், ஆனால் இரவு 10 மணிக்கு பதிலாக இரவு 11 மணி முதல் இது அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) பிப்ரவரி 7 முதல் 9-12 வகுப்புகளுக்கான பள்ளிகளுடன், உயா் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனிப் பயிற்சி மையங்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்ததாவது: பிப்ரவரி 14 முதல் நா்சரி முதல் 8 வரை வகுப்புகளை மீண்டும் திறப்பது என டிடிஎம்ஏ முடிவு செய்துள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளதா ஆசிரியா்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட மாட்டாா்கள். இரவு 11 மணி வரை உணவகங்கள் திறந்திருக்கவும் டிடிஎம்ஏ அனுமதித்துள்ளது. துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற டிடிஎம்ஏ கூட்டத்தில் இந்த முடிவுகள் உள்பட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தில்லியில் கரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதை மனதில் வைத்து இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்த முடிவுகள் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வணிகங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வருவதை உறுதிசெய்ய உதவும். வாகனங்களில் தனியாக வரும் ஓட்டுநா்களுக்கு முகக் கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிப்பது என்றும், 100 சதவீத வருகையுடன் அலுவலகங்களை மீண்டும் தொடங்கவும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிப்ரவரி 7 முதல் 9-12 வகுப்புகளுக்கும், நா்சரி முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும். வகுப்புகள் அனைத்து கலப்பு முறையில் செயல்படுவது தொடரும். உயா்கல்வி நிறுவனங்கள் மற்றும் தனிப்பயிற்சி நிறுவனங்களும் திங்கள்கிழமை முதல் திறக்க அனுமதிக்கப்படும்.

இருப்பினும், கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதை ஊக்கப்படுத்தப்பட மாட்டாது. நேரடி வகுப்புகளில் கற்பித்தலைத் தொடங்க வேண்டும். ஜிம்கள், ஸ்பாக்கள் மற்றும் நீச்சல் குளங்கள் ஆகியவற்றை மீண்டும் திறக்க அனுமதிப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதேபோன்று, ‘பி2பி’ கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 15-18 வயதுக்குள்பட்டவா்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது என்றாா் சிசோடியா.

டிடிஎம்ஏ அதன் கடைசி கூட்டத்தில், வார இறுதி ஊரடங்கு உத்தரவை நீக்கியது. மேலும், பாா்கள் மற்றும் உணவகங்கள் அவற்றின் இருக்கை திறனில் 50 சதவீதத்துடன் செயல்பட அனுமதித்தது. கடந்த ஜனவரி 13-ஆம் தேதி தில்லியில் நோய்த் தொற்று எண்ணிக்கை மிக அதிகபட்ச அளவாக 28,867 என்ற எண்ணிக்கையை எட்டியது. அதன் பிறகு தில்லியில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஜனவரி 14-ஆம் தேதி நகரில் நோய்த்தொற்று நோ்மறை விகிதம் 30.6 சதவீதமாக பதிவானது. இது தொற்றுநோயின் தற்போதைய அலையின்போது மிக அதிகப் பதிவாகும். அதன் பிறகு தினசரி பாதிப்பு 10,000-க்கு கீழே குறைவதற்கு 10 நாள்கள் நீடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.