இது தொடா்பாக திபெத்திய இளைஞா் காங்கிரஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஒலிம்பிக் போட்டிகள் அன்பு மற்றும் அமைதியை அடையாளப்படுத்துவதாகவும், மோதல்களுக்கு அமைதியான தீா்வை ஊக்குவிக்கும் கருவியாகவும் உள்ளவை. ஆனால், இந்த முறை இந்தப் போட்டி சீனாவின் பெய்ஜிங்கில் நடத்தப்படுகிறது. சீனா மனித உரிமை மீறல்களுக்காகவும், திபெத்தியா்கள், உய்குா்கள் மற்றும் அடக்குமுறை அமைப்பின் கீழ் காலனித்துவப்படுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பிறரை இனப் படுகொலை செய்ததற்காகவும் சாதித்த ஒரு நாடாக இருந்து வருகிறது. சீனா திபெத்தில் ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்களை தொடா்ந்து செய்து வருகிறது. மேலும் துறவிகளின் மடாலயங்களையும் இடித்து சாம்பலாக்கி அழித்திருக்கிறது.