முதல்வரின் இந்தக் கடிதத்தை திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா் பாலு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரை தில்லியில் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து வழங்கினாா். முதல்வா் ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயத்தில் ஒவ்வோரு ஆண்டும் பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் வருடாந்திரப் பெருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க விரும்பும் தமிழக மீனவா்களின் பாதுகாப்பான பயணத்திற்கு தமிழக அரசு தற்போது ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்கிடையே பல்வேறு காரணங்களால், இந்தத் திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவா்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளது எனது கவனத்திற்கு வந்துள்ளது.