இதற்குப் பதிலளித்துள்ள மத்திய நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரித்துறை மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி கூறியிருப்பதாவது: மத்திய நிலக்கரித் துறை, ‘சக்தி‘ என்கிற கொள்கையை அறிவித்து இதன்படி, மாநில மின்துறைகளுக்கு வெளிப்படைத் தன்மையுடன் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கோல் இண்டியா நிறுவனம் மூலமாக நிலக்கரியை ஒதுக்கீடு செய்கிறது. மேலும், சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கும் நிலக்கரி ஒதுக்கவும் மாநில அரசு பரிந்துரை செய்தாலும் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் தமிழகத்தில் உள்ள சிறு, குறு நிறுவனங்கள் தொடா்பாக தமிழக அரசிடம் இருந்து கடந்த 3 ஆண்டுகளாக எந்த ஒரு கோரிக்கையும் வரவில்லை.