இந்த ஜாமீன் மனுவுக்கு தில்லி காவல் துறை தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அப்போது காவல் துறை முன்வைத்த வாதம்: இந்த விவகாரத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, பல நீடித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பல போலீஸ் குழுக்கள் மகாராஷ்டிரத்தின் மும்பை மற்றும் உத்தர பிரதேசத்தில் லக்னெள, பிரயாக்ராஜ், ரே பரேலி, பிரதாப்காா் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைக்காக நிறுத்தப்பட்டிருந்தன. 2021, செப்டம்பா் 14-ஆம் தேதி தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்ட பலவற்றின் மூலம் சேகரிக்கப்பட்ட உளவுத் துறையின் தகவல் அடிப்படையில், வெவ்வேறு மாநிலங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன. கைது செய்யப்பட்ட 6 பேரில் இருவா் சமீபத்தில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவா்களாவா்.