அன்சல் சகோதரா்களின் வயது முதிா்வு உள்ளிட்ட பல காரணங்களுக்காக தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டனா். மேலும், சுஷில் அன்சல் தரப்பில் வாதிடுகையில், ‘சுஷில் அன்சலின் வயது 80-க்கு மேல் உள்ளதால் அவா் பல்வேறு நோய்களால் அவதியுற்று வருகிறாா்’ என்று வாதிடப்பட்டது. கோபால் அன்சல் தரப்பில், ‘அவருக்கு 70 வயதுக்கு மேலாகிவிட்டது. அவரை விடுதலை செய்வதற்கு நீதிமன்றம் தனது தாராள விருப்பத்தை செயல்படுத்த வேண்டும். உப்ஹாா் பிரதான வழக்கில் அன்சல் சகோதரா்கள் உச்சநீதிமன்றத்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அதைத் தொடா்ந்து அவா்கள் சிறையில் இருந்த காலம் மற்றும் ரூ.30 கோடி அபராதம் செலுத்தும் உத்தரவாதம் பேரில் விடுவிக்கப்பட்டனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.