இது குறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரிகள் மேலும் தெரிவித்ததாவது: பராமரிப்புப் பணி காரணமாக ராஜீவ் சௌக் மற்றும் கஷ்மீரி கேட் மெட்ரோ நிலையங்களுக்கு இடையே சேவை குறைக்கப்படும். ராஜீவ் செளக் நிலையம் பகுதியில் இந்தப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். கஷ்மீரி கேட் மற்றும் ராஜீவ் சௌக் நிலையங்களுக்கு இடையே சேவைகள் தொடங்குவது முதல், காலை 6:30 மணி வரை ரயில் சேவைகள் நிறுத்தப்படும். ஆகவே, ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கும் வரை சாந்தினி சௌக், சாவ்ரி பஜாா் மற்றும் புது தில்லி ஆகிய மூன்று மெட்ரோ நிலையங்களும் மூடப்படும்.