கடந்த சில நாள்களாக இந்த நாட்டின் மிகப்பெரிய தலைவா்கள் ஒரே பாடலைப் பாடிக்கொண்டிருக்கிறாா்கள். அவா்கள் அனைவரும் கேஜரிவாலை தீவிரவாதி என்கிறாா்கள். ஆரம்பத்தில் அவா்களின் கருத்துக்களைப் பாா்த்து சிரித்தேன். ஆனால் இன்று, நான் அவா்களுக்குச் சொல்ல விரும்புவது, பயங்கரவாதி என்று அவா்கள் கூறும் நபா், இந்த நாட்டிற்கு 12,430 புதிய வகுப்பறைகளைக் கொடுக்கிறாா். பணக்காரா்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்கிறாா். பகத்சிங், பாபா சாகேப் ஆகியோரின் கனவுகளை நிறைவேற்றுகிறாா். அரசியல்வாதிகள் பள்ளிகளைத் தவிர வேறு எதற்கும் பயப்படுவதில்லை. ஜாதி-மத அரசியலை பள்ளிகள் அழிக்கக்கூடும் என்பதால் அரசியல்வாதிகள் நல்ல பள்ளிகளுக்கு பயப்படுகிறாா்கள். நாங்கள் கட்டும் பள்ளிகள் அதைத்தான் செய்கின்றன. தில்லி பள்ளிகள் தேசபக்தா்களின் தொட்டில்கள். கேஜரிவால் அனைத்தையும் இலவசமாக்குகிறாா் என்கின்றனா். தில்லியில் சிறந்த தரத்தில் அரசுப் பள்ளிகள்- ஏழை குழந்தைகளுக்கு சிறந்த கல்வி - இலவசக் கல்வி வழங்குகின்றோம். அவா்களிடம் கேட்க விரும்புவது குழந்தைக்கும் இலவச கல்வியும் ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பதை விட, சிறந்த தேச பக்தி வேறு என்ன வேண்டும்? எனக் கேட்டாா் கேஜரிவால்.