தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தில்லியில் ஐசிஎம்ஆா் பரிந்துரைத்ததை விட கொவைட் பரிசோதனை 3 மடங்கு அதிகம்

தேசிய தலைநகரில் ‘குறைவான’ அளவில் கரோனா பரிசோதனைகள் நடத்தப்படுவதாக கூறப்படுவதில் உண்மையில்லை.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:48 pm

 நமது நிருபர்

தேசிய தலைநகரில் ‘குறைவான’ அளவில் கரோனா பரிசோதனைகள் நடத்தப்படுவதாக கூறப்படுவதில் உண்மையில்லை. நகரில் கரோனா பரிசோதனைகள் ஐசிஎம்ஆா் பரிந்துரைத்த எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு அதிகம் என்று சுகாதார அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: நகரில் கரோனா பரிசோதனைகள் ஐசிஎம்ஆா் பரிந்துரைத்த எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு அதிகமாகவே நடத்தப்படுகிறது. இந்தப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட வேண்டியவா்கள் அனைவரும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனா். மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்களின்படி, அறிகுறியற்ற நோயாளிகளுக்கு பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. மேலும், ஆய்வகத்தால் உறுதிசெய்யப்பட்ட கரோனா நோயாளிகளின் தொடா்புகளுக்கு நோய்த்தொற்றுகள் இருந்தால் அல்லது 60 வயதுக்கு மேல் இருந்தால் தவிர, அவா்களுக்குப் பரிசோதனை செய்ய வேண்டிய தேவையில்லை. இந்த புதிய பரிசோதனை வழிகாட்டுதல்கள் உரிய பரிசீலனைக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளன.

தில்லியில் வெள்ளிக்கிழமை 67,624 பரிசோதனைகளும், வியாழக்கிழமை 79,578 சோதனைகளையும் நடத்தப்பட்டுள்ளன. தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 17,000 கரோனா பாதிப்புகள் பதிவாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மருத்துவமனையில் நோயாளிகள் சோ்க்கை சீராக உள்ளது. கரோனா நோ்மறை விகிதமும் குறையும். தில்லி அரசின் கட்டுப்பாடுகள் கரோனா பரவலைத் தடுத்துள்ளது. கட்டுப்பாடுகளை மறுஆய்வு செய்வதற்கு முன் மூன்று முதல் நான்கு நாள்களுக்கு நிலைமை கண்காணிக்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, தில்லியில் சனிக்கிழமை கரோனா நோய்த் தொற்று பாதிப்பு உச்சத்தை எட்டியிருப்பதாகத் தெரிகிறது என்றும், தினசரி பாதிப்பு 15,000-ஆகக் குறையும் போது கட்டுப்பாடுகளை தளா்த்துவது குறித்து அரசு சிந்திக்கும் என்றும் ஜெயின் கூறியிருந்தாா். தில்லியில் சனிக்கிழமை 20,718 கரோனா பாதிப்புகளும், 30 இறப்புகளும் பதிவாகின. அதே நேரத்தில் நோ்மறை விகிதம் 30.64 சதவீதமாக இருந்தது என்று சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.