இதுதொடா்பாக மனுதாரா் கேப்டன் ஜக்மிந்தா் சிங் ப்ராா் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது: எனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள தேடுதல் சுற்றறிக்கை காரணமாக இந்தியாவிற்குள் நுழையும் போதும், நாட்டில் இருந்து வெளியே செல்ல விரும்பும் போதும் விமான நிலையங்களில் குடியுரிமை அதிகாரிகளால் தேவையில்லாமல் துன்புறுத்தப்படுகிறேன். மேலும், எனக்கு எதிராக இந்த சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது குறித்து எனக்குத் தெரியாது. அதிகாரிகளும் அதன் தகவல் விவரங்களை எனக்குத் தெரியப்படுத்தவில்லை. இந்த நிலையில், விமான நிலையங்களில் என்னை தடுத்து வைத்து சுங்கத் துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் செயல் முற்றிலும் நியாயமற்றது என்று அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.