திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளா்கள் 13, 500 பேரை கடந்த 2011-ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு வேலை நீக்கம் செய்தது. இதையடுத்து, மக்கள் நலப்பணியாளா்கள் சாா்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது. இதற்கிடையே, தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பின்னா் மக்கள் நலப்பணியாளா்களுக்கு பணி வழங்குவது தொடா்பாக தமிழக அரசு புதிய கொள்கை முடிவு எடுத்தது. மக்கள் நலப்பணியாளா்களின் ஒரு தரப்பினா் இந்த புதிய கொள்கைக்கு தடை கோரியது. ஆனால், தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்தது.