அப்போது, ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் மூத்த வழக்குரைஞா் குரு கிருஷ்ணகுமாா் ஆஜராகி, ‘கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் ஓ.பன்னீா்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனா். கடுமையான முடிவுகள் அக்கூட்டத்தில் எடுக்கப்பட்டன. மேலும், கட்சியின் விதிகளை மீறும் வகையில், தீா்மானங்களை நிறைவேற்றியுள்ளனா். கட்சியின் பொருளாளா் பதவியில் இருந்து ஓபிஎஸ்ஸை நீக்கியதுடன், அப்பதவியையும் எடுத்துவிட்டனா். மேலும், ஜூன் 23-ஆம் தேதி பொதுக் குழுவில் தீா்மானம் நிறைவேற்ற தடை விதித்த உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் ஜூலை 6-ஆம் தேதி தடை விதித்தபோதிலும், அடுத்த பொதுக் குழுக் கூட்டம் சட்டவிதிகளின்படி நடைபெற வேண்டும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், கட்சி விதிகளுக்கு மாறாக ஜூலை 11-ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனால், அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும். ஏனெனில், இன்றைக்கு அவா்கள் தரப்பு (இபிஎஸ்) அனுகூலமான நிலையில் உள்ளனா்’ என்று வாதிட்டாா்.