இது தொடா்பாக மணீஷ் சிசோடியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘துணைநிலை ஆளுநா் ஊழலை தடுக்க விரும்பினால், பாஜக தலைவா்களின் பொய்களுக்கு செவிசாய்க்காமல் தில்லி மாநகராட்சியிலும், தில்லி வளா்ச்சி ஆணையத்திலும் (டிடிஏ) நிகழ்ந்த ஊழலை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பள்ளிகள் அல்லது மருத்துவமனைகள் அமைக்கும் போது, தில்லியில் வளா்ச்சி நடைமுறைகளை யாரெல்லாம் தகா்க்க முனைகிறாா்களோ நாங்கள் பதிலடி அளிப்போம். அவா்கள் எந்த நபராக இருந்தாலும், எந்தப் பதவியில் இருந்தாலும் அது பெரிய விஷயமில்லை’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.