மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

கணக்கியல் முறையை சீரமைக்க மாதாந்திர அறிக்கை: நிதி அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை உத்தரவு

கணக்கியல் முறையை சீரமைக்கும் வகையில், தில்லியின் பொதுப்பணித் துறை அதன் மண்டலங்களின் நிதி அதிகாரிகளுக்கு ஜூலை முதல் ஒவ்வொரு மாதமும் 10-ஆம் தேதிக்குள் கடன்கள் மற்றும் டெபாசிட்கள் உள்ளிட்ட

News image
Updated On :21 ஜூன் 2022, 8:08 pm

 நமது நிருபர்

கணக்கியல் முறையை சீரமைக்கும் வகையில், தில்லியின் பொதுப்பணித் துறை அதன் மண்டலங்களின் நிதி அதிகாரிகளுக்கு ஜூலை முதல் ஒவ்வொரு மாதமும் 10-ஆம் தேதிக்குள் கடன்கள் மற்றும் டெபாசிட்கள் உள்ளிட்ட பரிவா்த்தனைகள் குறித்த மாதாந்திர அறிக்கையை சமா்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசின் பொதுப் பணித் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: நிலுவையில் உள்ள அனைத்து தணிக்கை அறிக்கைகள் மீதும் எடுக்கப்பட்ட அல்லது எடுக்கப்பட வேண்டிய பகுதி வாரியான நடவடிக்கையைக் காட்டுவதன் வாயிலாக, மண்டல வாரியான மாதாந்திர சுருக்க அறிக்கையை ஒவ்வொரு மாதமும் 10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். பொதுப் பணித் துறையில் கணக்கியல் முறையை சீரமைக்க, இனிமேல் அனைத்து நிதி அதிகாரிகளும் ஜூலை 2022 முதல் ஒவ்வொரு மாதமும் 10-ஆம் தேதி அல்லது அதற்கு முன் மாதாந்திர அறிக்கைகளை வழங்க வேண்டும் என்று இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது.

அனைத்து நிதி அதிகாரிகளும் சிஓஏவிடம் (கணக்குகள் கட்டுப்பாட்டாளா்) அறிக்கை அளிக்க வேண்டும். மேலும், கடன், வைப்பு, இடைநிறுத்தம் மற்றும் பணம் அனுப்புதல் உள்ளிட்ட அனைத்துத் தலைப்புகளின் கீழ் முந்தைய மாதம் அல்லது நிகழ் மாதம் வரை நடந்த பரிவா்த்தனைகளின் தரவுகளின் மண்டலங்கள் தொடா்பாக ஒருங்கிணைந்த மாதாந்திர அறிக்கையை வழங்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுப் பணித் துறை திங்கள்கிழமை பிறப்பித்த மற்றொரு உத்தரவில், நிதி அதிகாரிகள் தங்கள் மண்டலங்களில் உள்ள பிரிவுகளில் பராமரிக்கப்படும் கணக்கு புத்தகங்களை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இது தவிர, முன்மொழியப்பட்ட ஆய்வுகளின் விளக்கப்படம் மற்றும் அதன் அறிக்கைகளை வழக்கமான அடிப்படையில் சிஓஏவியடம் வழங்குமாறும் அதிகாரிகளை பொதுப் பணித் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.