அந்தக் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: உச்சநீதிமன்றம் மற்றும் தில்லி மற்றும் என்சிஆரில் உள்ள காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) ஆகியவை தில்லியில் உள்ள மாசு மற்றும் காற்று மாசு பிரச்னையை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளன. மேலும், காற்று மாசு மற்றும் வாகன மாசுவை திறன்மிக்க ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளன. கடந்த 2018, அக்டோபா் 14-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறைந்த மாசுவை வெளிப்படுத்தும் பிஎஸ்-6 இணக்க மோட்டாா் ரக வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களை 2020, ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து நாடு முழுவதும் விற்கவோ,பதிவு செய்யவோ கூடாது. பிஎஸ் -6 இணக்க வாகனங்களை விற்பதற்கும் அல்லது பதிவு செய்வதற்கும் அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தது.