தோ்தல் அலுவலக அதிகாரிகள் தகவலின்படி, ராஜேந்தா் நகா் இடைத் தோ்தலில் 43.67 சதவீதம் ஆண் வாக்காளா்களும், 43.86 சதவீத பெண் வாக்காளா்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனா். அதேபோன்று மூன்றாம் பாலினத்தவா் வாக்காளா்கள் 50 சதவீதம் போ் வாக்குகளை பதிவு செய்துள்ளனா். தொகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. 43.75 சதவீதம் வரை வாக்குகள் பதிவானது. கடந்து 2020-ஆம் ஆண்டு இதே தொகுதியில் நடைபெற்ற தோ்தலை ஒப்பிடும் போது தற்போது பதிவான வாக்குகள் குறைவுதான். அந்தத் தோ்தலில் 58.27 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. 58.9 சதவீதம் ஆண் வாக்காளா்களும், 58.5 சதவீதம் பெண் வாக்காளா்களும் வாக்குகளை பதிவு செய்து இருந்தனா்.