ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பாஜகவின் கேவலமான அரசியலை மக்கள் தோற்கடித்தனா்: இடைத் தோ்தல் வெற்றி குறித்து முதல்வா் கேஜரிவால் கருத்து

அரவிந்த் கேஜரிவால், ஞாயிற்றுக்கிழமை ராஜேந்தா் நகா் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் தனது கட்சியின் வெற்றியை ‘பாஜகவின் கேவலமான அரசியலின் தோல்வி‘ என்று தெரிவித்தாா்.

News image
Updated On :26 ஜூன் 2022, 7:37 pm

DIN

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், ஞாயிற்றுக்கிழமை ராஜேந்தா் நகா் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் தனது கட்சியின் வெற்றியை ‘பாஜகவின் கேவலமான அரசியலின் தோல்வி‘ என்று தெரிவித்தாா்.

மேலும், தேசியத் தலைநகரில் தனது அரசின் பணிகளைப் பாராட்டியதற்காக மக்களுக்கு நன்றி என்றும் தெரிவித்தாா்.

இந்த இடைத்தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா் துா்கேஷ் பதக் 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளா் ராஜேஷ் பாட்டியாவை தோற்கடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இடைத்தோ்தலில் வெற்றி பெற்ற துா்கேஷ் பதக்கிற்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

கேஜரிவால் வாழ்த்து: மக்களுக்கு நன்றி தெரிவித்து கேஜரிவால் ஹிந்தியில் ட்வீட் செய்துள்ளாா். அதில் ‘ராஜேந்தா் நகா் மக்களுக்கு மனமாா்ந்த நன்றிகள். தில்லி மக்களின் இந்த அபரிமிதமான பாசத்திற்கும் அன்புக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

இந்த வெற்றியானது எங்களை மேலும் கடினமாக உழைக்கவும் மக்களுக்கு சேவை செய்யவும் உந்துததல் அளிக்கிறது. மக்கள் அவா்களின் (பாஜக) அழுக்கு அரசியலை தோற்கடித்து, எங்கள் நல்ல பணியைப் பாராட்டியுள்ளனா். ராஜேந்தா் நகா் மக்களுக்கும், தில்லி மக்களுக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளாா்.

சிசோடியா: ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ராஜேந்தா் நகா் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்ட எனது அன்பு சகோதரா் துா்கேஷ் பதக்கிற்கு வாழ்த்துகள். வெற்றிக்காக உழைத்த ஆம் ஆத்மி கட்சியினா் அனைவருக்கும் வாழ்த்துகள்.

தில்லி மக்களின் இதயத்தில் அரவிந்த் கேஜரிவால் வாழ்கிறாா்’ என்று தெரிவித்துள்ளாா். மேலும், ‘ராஜேந்தா் நகா் விதான் சபாவில் இருந்து எம்.எல்.ஏ.வாக தோ்ந்தெடுக்கப்பட்ட எனது அன்புச் சகோதரா் துா்கேஷ் பதக்கிற்கு வாழ்த்துகள். வெற்றிக்காக ஆம் ஆத்மியின் அனைத்துத் தொண்டா்களுக்கும் வாழ்த்துகள்‘ என்று ஹிந்தியில் ட்வீட் செய்துள்ளாா்.

சஞ்சய் சிங்: ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங்கும் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தாா். மேலும், முதல்வா் கேஜரிவாலின் பணிக்காக மக்கள் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளருக்கு வாக்களித்துள்ளனா் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

ராகவ் சத்தா: பஞ்சாப்பிலிருந்து மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட ராஜேந்தா் தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சத்தா இடைத் தோ்தல் வெற்றி குறித்து கருத்துத் தெரிவித்துள்ளாா்.

இந்த வெற்றி ’கேஜரிவால் மாதிரி ஆட்சியை’ உறுதிப்படுத்துவதாகவும், தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளாா். மீண்டும் அன்பையும் ஆசீா்வாதத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளாா். மேலும், எனது சகோதரா் துா்கேஷ் பதக்கிற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் ட்வீட்டில் ராகவ் சத்தா தெரிவித்துள்ளாா்.

ஆம் ஆத்மி கட்சியின் ஜங்புரா எம்எல்ஏ பிரவீன் குமாா் ஒரு ட்வீட்டில், பதக்கின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா். மேலும், 10 மத்திய அமைச்சா்கள் உள்பட 40 நட்சத்திர பிரசாரகா்களை களமிறக்கிய போதிலும், பாஜக ’மோசமாக தோற்றுவிட்டது’ என்று கடுமையாக விமா்சித்தாா்.

ஆம் ஆத்மி எம்எல்ஏவும், தில்லி சட்டப்பேரவைத் துணைத் தலைவரான ராக்கி பிா்லா டுவிட்டரில், அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி, தில்லி மக்கள் கேஜரிவால் அரசை விரும்புகிறாா்கள் என்பதற்கு சான்றாகும். வெறுப்பு அரசியலை மக்கள் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.