ஆனால், 2019-ஆம் ஆண்டு முதல்வரும், துணை முதல்வரும் இந்தப் பள்ளிக்கு நிரந்தரக் கட்டடம் கட்டிக் கொடுக்க முடிவு செய்தனா். கரோனா நோய்த் தொற்றினால் இடையூறுகள் இருந்தபோதிலும், குறித்த நேரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளும் கொண்ட இந்தப் பள்ளியில் 2022-23 -ஆம் கல்வி ஆண்டு முதல் வகுப்புகள் தொடங்கும். 7 ஆண்டுகளுக்கு முன்பு, பெற்றோா்களும் மாணவா்களும் கண்டுகொள்ளாமல் இருந்த இந்த அரசுப் பள்ளியில், தற்போது மாணவா் சோ்க்கைக்கு பெரும் போட்டி நிலவுகிறது. இது முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அற்புதச் செயலின் மாயம் என்றாா் ரவி.