மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

போர்நிறுத்தம் கோரவில்லை; அமெரிக்கா தண்டிக்கப்படும் வரை போர் தொடரும்! - டிரம்ப்புக்கு ஈரான் பதிலடி!

அமெரிக்காவுடன் போர்நிறுத்தம் கோரியதாக டிரம்ப் கூறியது ஆதாரமற்றவை என ஈரான் அரசு தெரிவித்துள்ளது...

Iranian FM Araghchi announces the war will continue

அமெரிக்கா தண்டிக்கப்படும் வரை போர் தொடரும் என ஈரான் அரசு அறிவிப்பு... (கோப்புப் படம்) - AP

Published On :

ஈரான் அரசு போர்நிறுத்தம் கோரியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது பொய்யானது மற்றும் ஆதாரமற்றது என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல்களில் கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்கு, பதிலடியாக இஸ்ரேல் மற்றும் நட்பு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இத்துடன், சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முழுவதுமாக முடக்கியுள்ளது. இதனால், ஏராளமான நாடுகளில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஈரானின் புதிய தலைவர் அமெரிக்காவிடம் போர்நிறுத்தம் கோரியதாகவும், ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறக்கப்பட்டால் அதுகுறித்து பரிசீலனை செய்வதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் புதன்கிழமை (ஏப். 1) அன்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது பொய்யானது மற்றும் ஆதாரமற்றது எனவும், அமெரிக்கா தண்டிக்கப்படும் வரையில் போர் தொடரும் எனவும் ஈரானின் அரசு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி கூறியதாவது:

“வன்முறையாளர்கள் (அமெரிக்கா) முழுவதுமாகத் தண்டிக்கப்பட்டு, ஈரானுக்கு உரிய இழப்பீடு முழுவதும் வழங்கப்படும் வரையில் இந்தப் போர் தொடரும்” எனக் கூறியுள்ளார்.

இதேபோல், அதிபர் டிரம்ப் கூறியதை ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படைகளும் நிராகரித்துள்ளன. மேலும், ஹோர்முஸ் நீரிணை தங்களின் கட்டுப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், எதிரிகளுக்கு அந்தப் பாதையில் அனுமதியில்லை எனவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The Iranian government has stated that U.S. President Donald Trump's claim are false and baseless.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.