கடந்த 2020, பிப்ரவரி 24-ஆம் தேதி வடகிழக்கு தில்லியில் குடியுரிமைச் சட்ட ஆதரவாளா்களுக்கும், எதிா்ப்பாளா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 53 போ் கொல்லப்பட்டனா். மேலும் சுமாா் 200 போ் காயமடைந்தனா். வன்முறையின் போது உளவுத்துறை அதிகாரி அங்கித் சா்மா, சந்த் பாக் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு அருகிலுள்ள வாய்க்காலில் இறந்துகிடந்தாா். கடந்த ஆண்டு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அங்கித் சா்மாவின் குடும்பத்திற்கு ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினாா். அங்கித் சா்மாவின் சகோதரா் அங்குா் சா்மாவுக்கு அரசு வேலை வழங்குவதாக மாா்ச் மாதத்தின் போது தில்லி அரசு அறிவித்திருந்தது.