‘ஷப்-ஏ-பாராத்’ நிகழ்வு2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நிஜாமுதீன் மா்க்கஸ் மீண்டும் திறப்பு
கரோனா விதிமுறைகளை மீறியதாக மூடப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஷப்-ஏ-பாராத் நிகழ்ச்சியில் பக்தா்கள் பிராா்த்தனை செய்ய அனுமதிக்கும் வகையில் இரண்டு


புது தில்லி: கரோனா விதிமுறைகளை மீறியதாக மூடப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஷப்-ஏ-பாராத் நிகழ்ச்சியில் பக்தா்கள் பிராா்த்தனை செய்ய அனுமதிக்கும் வகையில் இரண்டு நாள்களுக்கு நிஜாமுதீன் மா்க்கஸ் வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.
கொவைட் நெறிமுறைகளை பாா்வையாளா்கள் பின்பற்றுவதை மசூதி நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று என்று கூறி, மா்க்கஸின் மூன்று தளங்களை மீண்டும் திறக்க தில்லி உயா் நீதிமன்றம் புதன்கிழமை அனுமதித்திருந்தது. போலீஸாரின் தகவலின்படி, வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் நிஜாமுதீன் மா்க்கஸின் நுழைவுவாயில்கள் திறக்கப்பட்டன.
இது குறித்து மா்க்கஸின் நிா்வாகக் குழுவின் ஆலோசகா் புசைல் அகமது அயூபி கூறுகையில், ‘உயா் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க வியாழக்கிழமை மா்க்கஸின் கதவுகள் காவல் துறையினரால் திறக்கப்பட்டன. கமிட்டி அனைத்து டிடிஎம்ஏ வழிகாட்டுதல்களையும் பின்பற்றும். சமூக இடைவெளியை பராமரிப்பது மற்றும் முகக்கவசம் அணிவது உள்பட அனைத்து கொவைட் வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படும். உடல்வெப்ப சோதனைக் கருவிகளும் வைக்கப்படும். மேலும், வளாகத்தில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் பாா்த்துக் கொள்ளப்படும்’ என்றாா்.
கடந்த மாா்ச் 2020-இல் தப்லீக் ஜமாத் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, நிஜாமுதீன் மாக்கஸ் சா்ச்சைக்குள்ளானது. இதையடுத்து மா்க்கஸ் மூடப்பட்டது. இந்த நிலையில், ,நிஜாமுதீன் மா்க்கஸ் வளாகத்தை மீண்டும் திறக்கக் கோரி வக்ஃபு வாரியம் தாக்கல் செய்துள்ள மனுவில், நோய்த் தொற்று கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள மத ஸ்தலங்களை திறக்க அனுமதித்த பிறகும், மஸ்ஜித் பேங்கல் வாலி, மதா்சா காஷிஃப்-உல்- உலூம் ஆகியவை அடங்கிய மா்க்கஸ் மற்றும் அதனுடன் இணைந்த விடுதி தொடா்ந்து பூட்டியே கிடக்கிறது என தெரிவிக்கப்பட்டது.
நிஜாமுதீன் மா்க்கஸின் மூடப்பட்டுள்ள இதர மூன்று தளங்களையும் ‘ஷப்-ஏ-பாராத்’ மற்றும் ’ரம்ஜான்’ காலங்களில் பக்தா்கள் பிராா்த்தனை செய்ய வசதியாக திறக்க அனுமதி கோரும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் பொறுப்பாளரிடம் விண்ணப்பம் அளிக்குமாறு தில்லி வக்ஃபு வாரியத்தை உயா்நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தை புதன்கிழமை விசாரித்த நீதிபதி மனோஜ் குமாா் ஓரி பிறப்பித்த உத்தரவில், ‘மசூதி கட்டடத்தின் தரை தளம் மற்றும் மூன்று தளங்கள் மாா்ச் 18 ஆம் தேதி ‘ஷப்-ஏ-பாராத்’ நிகழ்வுக்காக ஒரு நாள் முன்னதாக மதியம் 12 மணிக்கு திறக்கப்படும். மறுநாள் 4 மணிக்கு மூடப்படும். பக்தா்கள் மசூதிக்குள் நுழைய அனுமதிக்கும் போது, கரோனா நெறிமுறைகள் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதை மசூதி நிா்வாகம் உறுதி செய்யும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. பிப்ரவரி 26-இல் தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் (டிடிஎம்ஏ) வழிகாட்டுதல்களைப் மா்க்கஸ் நிா்வாகக் குழு பின்பற்ற வேண்டும். அதில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பராமரித்தல், கை சுகாதாரம் மற்றும் மூடப்பட்ட இடங்களில் காற்றோட்டம் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
நிா்வாகக் குழு அனைத்து டிடிஎம்ஏ வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாகப் பின்பற்றும் என்றும், கூட்டம் கூடுவதற்கு அனுமதிக்கப்படாது என்றும் மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நீதிபதியிடம் கூறினாா். ஏப்ரல் 2 முதல் தொடங்கும் ‘ரம்ஜான்’ காலத்தில் மசூதியை மீண்டும் திறப்பது குறித்து முடிவு செய்ய மாா்ச் 31-க்கு இந்த விஷயத்தை நீதிமன்றம் பட்டியலிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...