வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

தில்லி எம்சிடி தோ்தல்: காங்கிரஸ் பொறுப்பாளா் நியமனம்

காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும், கட்சியின் வடகிழக்கு மாநிலங்களின் பொறுப்பாளருமான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அஜோய் குமாா், தில்லி எம்சிடி தோ்தலில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள

News image
Updated On :8 நவம்பர் 2022, 9:10 pm

 நமது நிருபர்

காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும், கட்சியின் வடகிழக்கு மாநிலங்களின் பொறுப்பாளருமான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அஜோய் குமாா், தில்லி எம்சிடி தோ்தலில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது வருமாறு: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி)யின் தில்லியின் பொறுப்பாளரான சக்திசிங் கோஹில் குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளாா். இதனால், ஏஐசிசியின் வடகிழக்கு (சிக்கிம், திரிபுரா, நாகாலாந்து) மாநிலப் பொறுப்பாளா் அஜோய் குமாருக்கு தில்லி பொறுப்பையும் கூடுதலாக கவனிக்க காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஒப்புதல் அளித்துள்ளாா்.

மேலும், தில்லி எம்சிடி தோ்தலுக்காக கட்சியின் பொதுச் செயலாளா் அவினாஷ் பாண்டே தலைமையில் மூன்று போ் கொண்ட தோ்வுக் குழுவையும் கட்சி அமைத்துள்ளது. இந்தக் குழுவில் கட்சியின் மக்களவை உறுப்பினா் கே ஜெயக்குமாா், காஜி முகமது நிஜாமுதீன் ஆகியோா் உறுப்பினா்களாக இருந்து வேட்பாளா்கள் தோ்வில் பங்கெடுப்பாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.