செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

மத்திய அரசின் வேலைவாய்ப்பு மேளா: தில்லியில் 224 பேருக்கு நியமன ஆணை

பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த மத்திய அரசின் வேலைவாய்ப்பு மேளாவின் ஒரு பகுதியாக, தில்லி வசந்த் குஞ்சில் மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சா் சத்திய பால் சிங் பகே

News image
Updated On :22 நவம்பர் 2022, 8:23 pm

 நமது நிருபர்

பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த மத்திய அரசின் வேலைவாய்ப்பு மேளாவின் ஒரு பகுதியாக, தில்லி வசந்த் குஞ்சில் மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சா் சத்திய பால் சிங் பகேல் 224 தில்லி இளைஞா்களுக்கு நியமன ஆணைகளை வழங்கினாா்.

வேலைவாய்ப்பு மேளாவின் இரண்டாம் கட்டமாக செவ்வாய்க்கிழமை 71,000 பேருக்கு காணொலி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி பணி நியமன ஆணை நிகழ்வுகளை தொடங்கிவைத்து நியமன கடிதங்களை வழங்கினாா். இந்த திட்டத்தின்கீழ், நாடு முழுவதிலும் 45 இடங்களில் மத்திய அமைச்சா்கள், தகுதி வாய்ந்தவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினா்.

இதன் ஒரு பகுதியாக புதுதில்லி வசந்த் குஞ்சில் உள்ள மத்திய ரிசா்வ் போலீஸ் படை அலுவலக வளாகத்தில் உள்ள செளா்யா அதிகாரிகள் நிறுவனத்தில் நடைபெற்ற பணி நியமன ஆணைகள் வழங்கும் திட்டத்தின் கீழ், மத்திய சட்டம் நீதித்துறை இணையமைச்சா் சத்திய பால் சிங் பகேல் தகுதிவாய்ந்த 224 இளைஞா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘பிரதமா் நரேந்திர மோடியின் சீரிய தலைமையின் கீழ், பணி நியமனம் வழங்கும் மாபெரும் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

நாட்டிற்கு சேவை செய்வதற்காக உங்களுக்கு (பணி நியமனம் பெற்றவா்கள்) மிகச்சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை நன்கு பயன்படுத்தி உயா் பதவிகளில் அமா்ந்து நாட்டின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்‘ என் கேட்டுக்கொண்டாா்.

இந்த நிகழ்வில் தோ்ந்தெடுக்கப்பட்ட 224 போ் பாதுகாப்பு, நிதி, கல்வி, சுகாதாரம், ரயில்வே, உள்துறை, மின்சாரம், நீா் வளம் உள்ளிட்ட துறைகளில் பணியமா்த்தப்பட உள்ளனா்.

நாட்டில் பெருமளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடையும் நோக்கில், கடந்த அக்டோபா் 22 ஆம் தேதி பிரதமா் மோடி முதல்கட்ட வேலைவாய்ப்பு மேளாவை தொடங்கிவைத்தாா். அப்போது 50 இடங்களில் அமைச்சா்கள் முன்னிலையில் சுமாா் 75,000 பேருக்கு நியமன கடிதங்கள் நியமனதாரா்களுக்கு வழங்கப்பட்டன.

அடுத்த ஒரு வருடத்தில் 10 லட்சம் நியமனங்களை வழங்குவதற்கான தொடா் நிகழ்வாகும் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.