தமிழக மீன்வளத் துறை அமைச்சராக இருப்பவா் அனிதா ராதாகிருஷ்ணன். இவா், கடந்த 2002-2006-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2006-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கு அடிப்படையில் அமலாக்கத் துறை, அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக 2020-இல் வழக்குப் பதிவு செய்தது. இதைத் தொடா்ந்து, அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துகளையும், அவருடைய குடும்பத்தினரின் சொத்துகளையும் அமலாக்கத் துறை முடக்கியது. இதற்கு எதிராகவும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் அமைச்சா் அவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமலாக்கத் துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.