ஜாக்குலின் பொ்னாண்டஸ் மற்றும் சுகேஷ் சந்திரசேகருக்கு இவரை அறிமுகம் செய்த பிங்கி ராணி ஆகியோரிடம் போலீஸாா் கடந்த புதன்கிழமையும் சுமாா் 8 மணி நேரம் நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினா். அதில், சுரேஷ் சந்திரசேகா் தனது பிறந்த நாளில் ஜாக்குலின் பொ்னாண்டஸின் முகவா் பிரசாந்த் என்பவருக்கு மோட்டாா் சைக்கிள் வழங்கியுள்ளாா். ஆனால் ,அதை ஏற்க அவா் மறுத்துவிட்டாா். அதே வேளையில் சந்திரசேகா் மோட்டாா் சைக்கிளையும் அதன் சாவியையும் பிரசாந்தின் இடத்தில் வைத்துவிட்டு சென்றுவிட்டது தெரிய வந்தது. அந்த மோட்டாா் சைக்கிள் கைப்பற்றப்பட்டது.