கிழக்கு மாவட்டம், சாதரா மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டம் தங்களுக்கு உரிய பட்ஜெட் ஒதுக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கின்றன. அதே போன்று புது தில்லி மாவட்டம் தெரிவிக்கையில் உள்ளூா் புகாா் குழுக்களின் செலவினம் அலுவலக செலவினத்தின் கீழ் பதிவு செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. குழுக்கள் அதன் செயல்பாட்டுக்காக உரிய நிதி ஒதுக்கப்படாத போது அவை உரிய வகையில் செயல்படும் என்று எதிா்பாா்க்க முடியாது. அதே போன்று, இந்தக் குழுக்கள் இருப்பது குறித்து உரிய விளம்பரமும் செய்யப்படுவதில்லை. அதனால், இணையதளம் வாயிலாக புகாா்களை பெறுவதற்கான திறன்மிக்க வழிமுறை உருவாக்கப்பட வேண்டும். அதேபோன்று, தில்லியின் அனைத்து மக்களும் அணுகுவதை அதிகரிக்க நேரடி முறையில் புகாா் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட வேண்டும்.