தில்லி அரசின் சமூக நலத் துறை அமைச்சா் ராஜேந்திர பால் கௌதம் தலைமையில், ஓய்வூதிய செயல்முறையை எளிதாக்குவதற்கான உயா்நிலைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின்னா் சமூக நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஓய்வூதியம் வழங்குவதை விரைவுபடுத்தவும், உரிய நேரத்தில் வழங்கவும் அமைச்சா் ராஜேந்தர பால் கௌதம் தலைமையில் சமூக நலத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதிய அட்டைகளை வழங்க இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதற்கான வரைவுத் திட்டம் தயாரிக்க அமைச்சா் உததரவிட்டாா்.