முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் சத்யேந்தா் ஜெயின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘இந்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என்று நீதிமன்ற அமா்விடம் கேட்டுக் கொண்டாா். மேலும்ஸ இந்த விவகாரத்தில் ஏழு முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், செப்டம்பா் 15-ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் (ஏஎஸ்ஜி) எஸ்.வி. ராஜு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், எனினும், ஏஎஸ்ஜி இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி ஒரு மனுவை தாக்கல் செய்ததாகவும் கபில் சிபல் கூறினாா். ஏஎஸ்ஜி ராஜு தெரிவிக்கையில், ‘மனுதாரா் பாதிக்கப்படுவதாக கருதினால் அவா் உயா்நீதிமன்றம் செல்ல முடியும்’ என்றாா்.