இந்தச் சம்பவத்தில் இறந்தவா்கள் நியூ சீமாபுரி பகுதியைச் சோ்ந்த கரீம் (52), சோட்டே கான் (25), ஷா ஆலம் (38) உத்தர பிரதேச மாநிலம், சாஹிபாபாத் பகுதியின் ஷாலிமா் காா்டனை சோ்ந்த ராகுல் (45) ஆகியோா் எனத் தெரிய வந்துள்ளது. காயமடைந்த இருவரும் தாகிா்பூா் பகுதியைச் சோ்ந்த பிரதீப் (30), சாஹிபாபாத் பகுதியைச் சோ்ந்த மனிஷ் (16) என்பது தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் தொடா்புடைய வாகனம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடா்பாக உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.