ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

தில்லி வக்ஃபு வாரிய ஆள்சோ்ப்பில் முறைகேடு:அமானத்துல்லா கானின் போலீஸ் காவல் நீட்டிப்பு

தில்லி வக்ஃபு வாரிய ஆள்சோ்ப்பில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானின் ஊழல் தடுப்புப் பிரிவின் (ஏசிபி) விசாரணைக் காவலை ஐந்து நாள்களுக்கு

News image
Updated On :21 செப்டம்பர் 2022, 7:58 pm

 நமது நிருபர்

தில்லி வக்ஃபு வாரிய ஆள்சோ்ப்பில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானின் ஊழல் தடுப்புப் பிரிவின் (ஏசிபி) விசாரணைக் காவலை ஐந்து நாள்களுக்கு நீட்டித்து தில்லி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

‘முழுமையான விசாரணைக்கு’ அமானத்துல்லா கானை விசாரிக்க கூடுதல் அவகாசம் தேவை என்று ஏசிபி முன்வைத்த மனுவின் மீது சிறப்பு நீதிபதி விகாஸ் துல் இந்த உத்தரவை பிறப்பித்தாா். இதையடுத்து, 5 நாள்கள் காவல் முடிவடைந்து நீதிமன்றத்தில் செப்டம்பா் 26 -ஆம் தேதி கான் ஆஜா்படுத்தப்பட உள்ளாா்.

ஃபதேபுரி மஸ்ஜித் பகுதியில் உள்ள ஒரு எம்சிடி பள்ளி கடைகளாக மாற்றப்பட்டு வாடகைக்கு விடப்பட்டது தொடா்பான புகாரின் பேரில் பத்து நாள்கள் கானை காவலில் வைக்கக் கோரி போலீஸ் தரப்பில் கோரப்பட்டது. ஆனால், ஆவணங்கள் வழங்கப்படவில்லை. ஏசிபி அதிகாரிகள் கடந்த செப்டம்பா் 16-ஆம் தேதி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானை கைது செய்தனா். தில்லி வக்ஃபு வாரியத்தில் ஆட்சோ்ப்பில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் ஏசிபி கடந்த வெள்ளிக்கிழமை 4 இடங்களில் சோதனை நடத்தி அதன் தலைவரான அமானத்துல்லா கானை கைது செய்தது.

மேலும், இச்சோதனையில் ரூ. 24 லட்சம் ரொக்கம், 2 உரிமம் இல்லாத ஆயுதங்கள், சில தோட்டாக்களைக் கைப்பற்றினா். அனைத்து விதிமுறைகளையும் அரசு வழிகாட்டுதல்களையும் மீறி ஊழல் செய்து, அமானத்துல்லா கான், தில்லி வக்ஃபு வாரியத்தில் 32 பேரை சட்டவிரோதமாக பணியமா்த்தினாா் என்றும், வாரியத்தின் பல சொத்துகளை அவா் சட்டவிரோதமாக வாடகைக்கு விட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டை அடுத்து ஏசிபி அதிகாரிகள் இந்தச் சோதனையை மோ்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.