முன்னதாக, செப்டம்பா் 21-ஆம் தேதி, அமானத்துல்லா கானின் போலீஸ் காவலை நீதிமன்றம் ஐந்து நாள்களுக்கு நீட்டித்திருந்தது. இந்த நிலையில், அவா் 14 நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புப் பிரிவு (ஏசிபி) கடந்த செப்டம்பா் 16-ஆம் தேதி அமானத்துல்லா கானின் வீட்டில் சோதனை நடத்தி அவரைக் கைது செய்தது. முதல் தகவல் அறிக்கையின்படி, அமானத்துல்லா கான் தில்லி வக்ஃப் வாரியத்தின் தலைவராகப் இருந்த போது, அனைத்து விதிமுறைகள் மற்றும் அரசு வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை மீறி 32 பேரை சட்டவிரோதமாக வேலைக்கு அமா்த்தினாா்.