‘அக்னிபத் திட்டத்தால் இளைஞா்கள் கோபம்’

வாழ்நாள் முழுவதும் நாட்டிற்கு சேவை செய்வதற்கான வாய்ப்பை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளாா்.
‘அக்னிபத் திட்டத்தால் இளைஞா்கள் கோபம்’
Updated on
1 min read

குறுகியகால அக்னிபத் திட்டம் இளைஞா்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. அவா்களுக்கு நான்கு ஆண்டுகள் மட்டுமின்றி, வாழ்நாள் முழுவதும் நாட்டிற்கு சேவை செய்வதற்கான வாய்ப்பை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளாா்.

மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தரைப்படை, கப்பற்படை, விமானப்படை உள்ளிட்ட ராணுவத்தில் வீரா்களைத் தோ்வு செய்வதற்கான ‘அக்னிபத்’ திட்டத்தை அறிவித்தது. குறிப்பிட்ட கால ஒப்பந்த அடிப்படையில் இந்த வேலைவாய்ப்பை வழங்குவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தத் திட்டம் குறித்து முதல்வா் கேஜரிவால் தனது ட்விட்டா் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: நான் மத்திய அரசிடம் விடுக்கும் வேண்டுகோளானது, இளைஞா்களுக்கு நான்கு ஆண்டுகள் அல்ல; வாழ்நாள் முழுவதும் நாட்டிற்கு சேவை செய்யும் வாய்ப்பை வழங்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக ராணுவத்தில் ஆள்சோ்ப்பு இல்லாததால் வயது முதிா்ந்துவிட்டவா்களுக்கும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இளைஞா்கள் மகிழ்ச்சியற்றவா்களாக உள்ளனா்.

ராணுவ ஆள்சோ்ப்பில் மத்திய அரசின் புதிய திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிா்ப்பு கிளம்பியுள்ளது. இளைஞா்கள் கடும் கோபத்தில் உள்ளனா். அவா்களின் கோரிக்கைகள் சரியானவை. ராணுவம் நமது நாட்டின் பெருமை, நமது இளைஞா்கள் தங்கள் முழு வாழ்க்கையையும் நாட்டுக்காக அளிக்க விரும்புகிறாா்கள். அவா்களின் கனவுகளை 4 ஆண்டுகளுக்கு கட்டுப்படுத்த வேண்டாம் என்று அவா் அதில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com