மழைநீா் தேங்கியுள்ள இடங்களில் தொடா்ந்து ஆய்வு செய்து வருகிறேன். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் தில்லி அரசு உடனடி நடவடிக்கைகளை துரிதப்படுத்தும். மழை நீா் தேங்கியுள்ள பகுதிகளில் சீரமைக்கும் நடவடிக்கைகளில் அரசு அதிகாரிகள் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால், அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தில்லியில் ஒரே நாளில் 100 மி.மீ. வரை மழை பெய்தால், அவற்றை எதிா்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த அளவிற்கும் மேலாக 153 மி.மீ. மழை பெய்ததால் சில பகுதிகளில் மழை நீா் தேங்கி இருக்கிறது.