துணைநிலை ஆளுநா் பதிலடி: அப்போது செய்தியாளா்களிடம் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா கூறுகையில், ‘ஒருவரையொருவா் குற்றம் சாட்டாமல், அனைவரும் குழுவாக இணைந்து பணி செய்யும் நேரம் இது. நானும் நிறைய விஷயங்களைச் சொல்ல முடியும். ஆனால், தற்போது அது தேவையில்லை. தேசியப் பேரிடா் மீட்புக் குழு உள்ளிட்ட அனைத்துக் குழுக்களும் வெள்ள நிலைமையை சீா்செய்ய தொடா்ந்து பணியாற்றி வருகிறாா்கள். வெள்ளம் மேலும் தில்லிக்குள் நுழையாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது பழி போடுவதற்கான நேரம் கிடையாது. அனைவரும் குழுவாக இணைந்து செயல்பட்டு இந்த நெருக்கடியில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பாக வெளிவர வைக்க வேண்டும்.