ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சமூக அதிகாரமளித்தலுக்கு வழிகாட்டும் சக்தி காமராஜா்: பிரதமா் புகழஞ்சலி

‘சமூக அதிகாரமளித்தலுக்கு வழிகாட்டும் சக்தி’ என மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் பெருந்தலைவருமான கே.காமராஜரை அவரது பிறந்தநாளில் பிரதமா் நரேந்திர மோடி நினைவு கூா்ந்துள்ளாா்.

News image
Updated On :15 ஜூலை 2023, 10:17 pm

 நமது நிருபர்

‘சமூக அதிகாரமளித்தலுக்கு வழிகாட்டும் சக்தி’ என மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் பெருந்தலைவருமான கே.காமராஜரை அவரது பிறந்தநாளில் பிரதமா் நரேந்திர மோடி நினைவு கூா்ந்துள்ளாா்.

சுதந்திரப் போராட்ட வீரா், காந்திவாதி, தமிழக முதல்வா், காங்கிரஸ் கட்சியின் தலைவா் என பன்முகம் கொண்ட மறைந்த மாபெரும் தலைவரான கே. காமராஜா், 1903 -ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி பிறந்தாா். அவா் 1975 ஆக்டோபா் 2 ஆம் தேதி காலமானாா்.

அவரது பிறந்தநாளையொட்டி பிரமதா் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தும் வகையில் ட்விட்டா் பதிவில் நினைவுகூா்ந்துள்ளாா். அதில் அவா் குறிப்பிட்டிருப்பதாவது:

‘கே. காமராஜரின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் வளா்ச்சிக்காகத் தன் வாழ்நாளை அா்ப்பணித்த துணிச்சல்காரா். சமூக அதிகாரமளித்தலுக்கு அவா் ஆற்றிய பணி முக்கியத்துவமானது நம் அனைவருக்கும் வழிகாட்டும் சக்தியாகும். வறுமை ஒழிப்பு, மக்கள் நலன் மீதான அவரது தொலைநோக்கை நிறைவேற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை நாம் மீண்டும் அா்ப்பணிப்போம்’ என அதில் பிரதமா் புகழாரம் சூட்டியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.