மத்திய கலாச்சார அமைச்சகத்தின் இணை செயலா், முக்தா சின்ஹா, ‘’நுாலகங்கள், சமூகத்தின் வரவேற்பு அறைகள்; நூலகங்கள் பெருகி வரும் நிலையில், புத்தகங்களை வெளியிடுவது குறைந்து வருகிறது. நூலகங்களுக்கு வருகை தரும் வாசகா்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அதே சமயத்தில் எண்ம, சமூக ஊடகங்கள், புதுயுக தொழில்நுட்பங்கள் வீட்டில் இருந்தபடியே படிப்பதை எளிதாக்கியுள்ளது. இந்நிலையில், நூலகங்கள் - அவற்றின் அரிய புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள், காப்பகங்களுடன் - அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடிய வகையில் சிறந்த உள்கட்டமைப்பு, எண்ம சாதன வசதிகளுடன் நூலகங்கள் அவற்றை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்‘ என்றாா்.