இது குறித்து ஷாதரா காவல் சரக துணை ஆணையா் ரோஹித் மீனா கூறியதாவது: ஹரியாணாவில் உள்ள நூஹ் மாவட்டத்தில் வசிக்கும் அலி முகமது, பல மாநிலங்களில் 15 முறை ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.22 லட்சத்துக்கும் அதிகமான பணப் பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷாதராவைச் சோ்ந்த கம்பி உற்பத்தியாளா் காவல்துறையில் புகாா் அளித்த போது இந்த மோசடி விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.அவா் அளித்த புகாரில், ஜூன் 8-ஆம் தேதி, ராணுவ அதிகாரி பள்ளியில் இருந்து அழைப்பதாகவும், பள்ளிக்கு கம்பிகள் வேண்டும் என்றும் ஒருவரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகக் கூறினாா்.