கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தலைநகரில் இன்றும் லேசான மழைக்கு வாய்ப்பு

பகலில் வெயிலின் தாக்கமும், புழுக்கமும் இருந்தது. நகரத்தில் அதிகபட்சமாக பாலத்தில் 42 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில், சனிக்கிழமையும் (ஜூன் 24) மழைக்கு வாய்ப்பு

News image
Updated On :23 ஜூன் 2023, 5:49 pm

DIN

தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை சில இடங்களில் லேசான மழை பெய்தது. எனினும், பகலில் வெயிலின் தாக்கமும், புழுக்கமும் இருந்தது. நகரத்தில் அதிகபட்சமாக பாலத்தில் 42 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில், சனிக்கிழமையும் (ஜூன் 24) மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தில்லியில் சில தினங்களாக வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. அவ்வப்போது லேசான மழை இருந்தாலும் புழுக்கமும் உள்ளது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை சில இடங்களில் லேசான மழை பெய்தது. எனினும், பகலில் வெயிலின் தாக்கமும், புழுக்கமும் இருந்தது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் 0.4 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இதேபோல முங்கேஸ்பூரில் 3 மி.மீ., நஜாஃப்கரில் 4 மி.மீ., ஆயாநகரில் 7.6 மி.மீ., தில்லி பல்கலை.யில் 1.5 மி.மீ., லோதி ரோடில் 0.8 மி.மீ., நரேலாவில் 4 மி.மீ., பாலத்தில் 42 மி.மீ., ரிட்ஜில் 2.4 மி.மீ., பீதம்புராவில் 23 மி.மீ., பூசாவில் 27 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் வெள்ளிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலையில் இயல்பைவிட 1 டிகிரி குறைந்து 27.4 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்படை விட 1 டிகிரி குறைந்து 37.7 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 73 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 61 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.

‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்: தலைநகரில் ஐடிஓ, பட்பா்கஞ்ச், மந்திா் மாா்க், லோதி ரோடு, ஆனந்த் நகா், கமலா மாா்க்கெட், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், விவேக் விஹாா் உள்பட பல இடங்களில் காலை காற்றின் தரக் குறியீடு ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, ‘சனிக்கிழமை (ஜூன் 24) நகரில் லேசான மழை பெய்யக் கூடும். வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்’ என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.