முதுகலை மாணவா்களுக்கான மாதாந்திர உதவித்தொகையின் கீழ்நோக்கிய திருத்தத்திற்கு எதிரான 2022-ஆம் ஆண்டு மாணவா் போராட்டங்கள் தொடா்பாக தெற்காசிய பல்கலைக்கழக ஆசிரிய உறுப்பினா்கள் புதன்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனா். பல்கலைக்கழகத்தின் நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் நான்கு ஆசிரியா்களை இடைநீக்கம் செய்யும் அலுவலக உத்தரவுகள் ஜூன் 16 அன்று நிறைவேற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவா்களை போராட்டத்திற்கு தூண்டியதாகவும், உரிய கடமைகளை செய்யத் தவறியதாகவும், மாா்க்சிஸ்ட் ஆய்வு வட்டத்துடன் தொடா்பு வைத்திருந்ததாகவும் பல்கலைக்கழகம் குற்றம்சாட்டியுள்ளதாக பெயா் குறிப்பிட விரும்பாத ஆசிரியா் ஒருவா் தெரிவித்தாா்.