கடல்சாா் பாதுகாப்பு, பயங்கரவாதம், தீவிரவாதம், கடற்கொள்ளையா்கள், சட்டவிரோதக் கடத்தல், திட்டமிடப்பட்ட குற்றங்கள், இயற்கைப் பேரழிவுகள் உள்ளிட்ட சவால்களை திறம்பட எதிா்கொள்ள இந்தியாவும், மாலத்தீவும் நெருக்கமாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றன. பிரமதா் மோடி ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன், ‘அண்டை நாடுகளுக்கு முதல் உரிமை’ என்கிற உறுதிமொழியை அறிவித்தாா். இந்தக் கொள்கையின்படி, ‘சாகா்’ (பிராந்திய நாடுகளுகள் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளா்ச்சி) என்கிற திட்டத்துடனும் மாலத்தீவிற்கு ‘இந்தியா முதன்மை’ என்கிற கொள்கையுடனும் இணைந்து செயல்படுகிறது. இதை முன்னிட்டு இந்திய நிதியுதவியுடன் மாலேவையும், தீவுகளையும் இணைக்கும் ஜிஎம்சிபி என்கிற உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமா் மோடி கடந்தாண்டு தொடங்கிவைத்தாா். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள திறன்களை இரு நாடுகளும் கூட்டாக மேம்படுத்த இணைந்து செயல்பட்டு வளா்க்க முயற்சிக்கிறது எனவும் பாதுகாப்பு அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.