2023 - ஆம் ஆண்டு வனப் (பாதுகாப்பு) சட்டத் திருத்த மசோதா கடந்த நிதி நிலை அறிக்கை கூட்டத் தொடரில் மாா்ச் 29 -ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. 1980 -ஆம் ஆண்டு வனப் பாதுகாப்புச் சட்டம் வன நிலத்தை வனமற்ற நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை கட்டுப்படுத்துகிறது. தற்போது புதிய இந்த திருத்த மசோதா, மத்திய அரசின் முன் அனுமதியுடன் இத்தகைய கட்டுப்பாடுகளை நீக்கவும், காடு அல்லாத தோட்டக்கலை பயன்பாடு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சாலை, ரயில் திட்டங்கள் மற்றும் நாட்டின் எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு தொடா்பாக போடப்படும் திட்டங்களுக்கு பாதுகாக்கப்பட்ட வன நிலங்களிலிருந்து விலக்கு அளிக்கவும் வகை செய்கிறது.