விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்! சீனு ராமசாமிஇடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை! யாருக்கு ஆதரவு? அன்புமணி பேட்டிராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!

தந்தைகளுக்குச் சமர்ப்பணம்..! வரவேற்பைப் பெறும் ஜிவியின் ஹேப்பி ராஜ்!

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ஹேப்பி ராஜ் திரைப்படம் குறித்து...

The Happy Raj film crew at the cinema. The film's poster is in the center.

திரையரங்கில் ஹேப்பி ராஜ் படக்குழுவினர். நடுவில் படத்தின் போஸ்டர். - படங்கள்: எக்ஸ் / ஜிவி பிரகாஷ் குமார்.

Published On :

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் திரையரங்குகளில் இன்று (மார்ச் 27) வெளியாகியுள்ள ஹேப்பி ராஜ் திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தத் திரைப்படம் தந்தை - மகனுக்கு உள்ள உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் ஹேப்பி ராஜ் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

உறவுச்சிக்கல்களை நகைச்சுவை பாணியில் சொல்லும் இப்படத்தில் ஜிவிக்கு ஜோடியாக நடிகை கௌரி பிரியாவும் முக்கிய கதாபாத்திரங்களில் அப்பாஸ், ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் வெற்றியை அனைத்து தந்தைகளுக்கும் சமர்ப்பிப்பதாக நடிகர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

திரையரங்கிற்குச் சென்ற ஜிவி பிரகாஷ் ரசிகர்களின் அன்பையும் வாழ்த்துகளையும் பெற்று நெகிழ்ச்சியாக விடியோ வெளியிட்டுள்ளார்.

இயக்குநரைக் குறிப்பிட்டு, “நீ ஜெயிச்சிட்ட மரியா இளஞ்செழியன்” என ஜிவி பிரகாஷ் வாழ்த்தியுள்ளார். ரசிகர்களும் கடைசி அரை மணி நேரத்தில் கண் கலங்கியதாக சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

Summary

Dedicated to Fathers! GV's 'Happy Raj' Receives a Warm Welcome!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.