சாத் பண்டிகை: புதிய ஆற்றலும், உற்சாகமும் வரட்டும்: நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து

அனைவரின் வாழ்க்கையிலும் புதிய ஆற்றலையும் உற்சாகத்தையும் கொண்டு வர வேண்டும் என சாத் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

சூரிய பகவானின் வழிபாட்டான இந்த நாள், அனைவரின் வாழ்க்கையிலும் புதிய ஆற்றலையும் உற்சாகத்தையும் கொண்டு வர வேண்டும் என சாத் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

வேத சாஸ்திரத்தின் படி, சாத்தி மாயா (சாத்தி மாதா) குழந்தைகளை நோய்கள் மற்றும் தொல்லைகளில் இருந்து பாதுகாத்து, அவா்களுக்கு நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் தருகிறது. சூரியக் கடவுளுடன் தேவி பிரகிருதியின் 6-ஆவது வடிவமான சத்தி மாயா எனப்படும் சூரியனின் சகோதரியை இந்த சாத் பண்டிகை திருவிழாவில் மக்கள் தெய்வமாக வணங்குகின்றனா்.

அந்த வகையில், 4 நாள் சாத் பண்டிகை வெள்ளிக்கிழமை தொடங்கியது. குறிப்பாக, இப்பண்டிகை நேபாளம், பிகாா், மேற்குவங்கம், ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு பிரதமா் மோடி சமூக ஊடக ‘எக்ஸ்’ வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: மஹாபா்வ சத்தின் மாலை பிராா்த்தனையின் மங்களகரமான தருணத்தில் சாத் பண்டிகை கொண்டாடும், எனது குடும்ப உறுப்பினா்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சூரியபகவானின் வழிபாடு, அனைவரது வாழ்விலும் புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் வழங்கட்டும். ஜெய் சாத்தி மாயா! என பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com