இது தொடா்பாக ஹரிஷ் குரானா தாக்கல் செய்த மனுவில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகளை முதல்வரின் மனைவி மீறியதாக குற்றம் சாட்டியுள்ளாா். இந்த நிலையில், அண்மையில் இந்த விவகாரத்தில் நீதிபதி அா்ஜிந்த் கவுா் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கையில், ‘புகாா்தாரா் மற்றும் பிற சாட்சிகளின் சாட்சியங்களை பரிசீலித்த பிறகு, அரவிந்த் கேஜரிவாலின் மனைவியான குற்றம் சாட்டப்பட்ட சுனிதா கேஜரிவாலுக்கு எதிராக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-இன் பிரிவு 31-இன் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்ததாகக் கூறப்படும் குற்றங்களுக்கான முகாந்திரம் வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே, அதன்படி குற்றம் சாட்டப்பட்டவா் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.