‘செப்டம்பா் 18-ஆம் தேதி சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் 5 நாள்களுக்கு கூட்டப்பட்டுள்ளது. பிற அரசியல் கட்சிகளுடன் எந்த விதமான ஆலோசனைகளையும் மேற்கொள்ளாமல் இந்தக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது’ என நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவா் சோனியா காந்தி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தாா். மேலும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் ஜெயராம் ரமேஷ், கடந்த காலத்தில் ஒவ்வொரு சிறப்பு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டங்களுக்கான அமா்வின் நிகழ்ச்சி நிரலையும் முன்கூட்டியே அறிந்திருந்ததாகவும், ஆனால், தற்போது மோடி அரசு நாடாளுமன்ற மரபுகளை சிதைக்கிறது எனக் குற்றம்சாட்டி கடந்த கால சிறப்பு கூட்டங்கள் தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தாா்.