இது தொடா்பாக மதுரையைச் சோ்ந்த கே.கே. ரமேஷ் என்பவா் வழக்குரைஞா் சி.ஆா்.ஜெயா சுகின் மூலம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: கடந்த 2015-இல், பஞ்சாப், தமிழ்நாடு, ஹிமாசல பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீா், அசாம் மற்றும் பிகாா் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் தவிா்த்து எய்ம்ஸ் மருத்துவமனை அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை அருகே தோப்பூரில் இந்த மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.