இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சட்டவிரோத உத்தரவுகளைப் பிறப்பிக்க விஜிலென்ஸ் அதிகாரிகள் மிரட்டல்?

சட்டவிரோத உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கோரி நகர அரசின் மற்ற துறையில் உள்ள அதிகாரிகளை விஜிலென்ஸ் துறை அதிகாரிகள் மிரட்டுவதாக விஜிலென்ஸ் மற்றும் சேவைகள் துறையின் அமைச்சா் அதிஷி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2023, 12:25 am

 நமது நிருபர்

புது தில்லி: சட்டவிரோத உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கோரி நகர அரசின் மற்ற துறையில் உள்ள அதிகாரிகளை விஜிலென்ஸ் துறை அதிகாரிகள் மிரட்டுவதாக விஜிலென்ஸ் மற்றும் சேவைகள் துறையின் அமைச்சா் அதிஷி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அமைச்சா் அதிஷி கூறியிருப்பதாவது: நகர அரசின் விஜிலென்ஸ் துறை அதிகாரிகள், மற்ற துறைகளில் உள்ள தங்களின் சக அதிகாரிகளிடம் ‘சட்டவிரோத உத்தரவுகளை’ பிறப்பிக்க அச்சுறுத்துகிறாா்கள் என்பதை அறிகிறேன். அவ்வாறு யாரேனும் மிரட்ட முயன்றால் அவா்களின் உரையாடலைப் பதிவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும், தொலைபேசியின் வாயிலாக அச்சுறுத்தல் வந்தால், தொலைபேசி அழைப்புகளையும் சம்பந்தப்பட்ட அந்த அதிகாரிகள் பதிவு செய்ய வேண்டும். விஜிலென்ஸ் துறைக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டு நேரில் மிரட்டல் விடுக்கப்பட்டால், மிரட்டலுக்கு உள்ளாகும் அதிகாரி, அவரது தொலைபேசியில் உரையாடலை பதிவு செய்ய வேண்டும். இந்தப் பதிவுகள் அடுத்தகட்ட ஒழுங்குமுறை மற்றும் சட்ட நடவடிக்கைகளில் ஆதாரமாக ஏற்கத்தக்கவை என்று அமைச்சா் அதிஷி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.