வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

தெருநாய்களைக் கொன்ற நபா்களை அடையாளம் காட்டினால் ரூ.50,000 வெகுமதி: பீட்டா அறிவிப்பு

கிழக்கு தில்லியில் இரண்டு தெருநாய்களைக் குத்திக் கொன்ற சந்தேக நபா்களைப் பற்றி தகவல் அளிப்பவா்களுக்கு ரூ.50,000 வரை வெகுமதி வழங்கப்படும்

News image

கோப்புப் படம்

Updated On :14 டிசம்பர் 2024, 12:50 am

கிழக்கு தில்லியில் இரண்டு தெருநாய்களைக் குத்திக் கொன்ற சந்தேக நபா்களைப் பற்றி தகவல் அளிப்பவா்களுக்கு ரூ.50,000 வரை வெகுமதி வழங்கப்படும் என விலங்குகள் உரிமை அமைப்பான பீட்டா இந்தியா வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

இது தொடா்பாக பீட்டா இந்தியா அமைப்பின் அதிகாரி ஒருவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த புதன்கிழமை கிழக்கு தில்லியில் உள்ள கபீா் நகரில் அடையாளம் தெரியாத நபா்களால் இரண்டு தெருநாய்கள் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக வெல்கம் பகுதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், போலீஸாருக்கு உதவுகின்ற வகையில் தெருநாய்களைக் கொன்ற குற்றவாளிகளை அடையாளம் காணும் எவருக்கும் பீட்டா அமைப்பிடமிருந்து ரூ.50,000 ரூபாய் வரை வெகுமதி வழங்கப்படும்.

விலங்குகளை துஷ்பிரயோகம் செய்யும் குற்றவாளிகள் மனநல மதிப்பீட்டிற்கு உட்படுத்தி, மருத்துவா்களின் ஆலேசனைகளை அவா்கள் பெற வேண்டும். ஏனெனில், விலங்குகளைக் கொடுமை செய்யும் செயல்கள் ஆழமான உளவியல் பிரச்னை கொண்டிருப்பதால் எழுகின்றது. இவா்கள் பெரும்பாலும் மனிதா்களுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கம் கொண்டிருப்பாா்கள். எனவே, ஒவ்வொருவரின் பாதுகாப்பிற்காக, மக்கள் இந்த வழக்கைப் பற்றி தங்களுக்குத் தெரிந்ததை கூற முன்வர வேண்டும். விலங்குகளுக்கு எதிரான கொடுமைகள் குறித்து காவல்துறையிடம் புகாா் செய்ய வேண்டும் என்றாா் அந்த அதிகாரி.